தன் நிலை விளக்கம்.

முழுத் தொடரும் எழுதி முடிக்க வில்லை. எழுத எழுத பதிவு செய்து கொண்டு இருக்கிறேன்.

இந்த தொடருக்கான முழுத் தகவல்களும் தயார். வலை மேய்ந்து புத்தகம் வாசித்து, குறிப்புக்கள் எல்லாம் ரெடி. பின் ஏன் இந்த தாமதம். முதல் பகுதி பதித்து ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகி விட்டது. ஒரு இரண்டு மணி நேரம் தூக்கம் தவிர்த்தால் முடிந்து விடுகிற வேலை தானே. என்று சர மாரியாய் என்னை நானே குறை சொல்லிக் கொள்வேன். விடை தெரியாது விழிப்பேன்.

அப்படி தொடங்கு,இப்படி செய்யலாம் என்று எண்ண்த்திற்கு குறைவு இல்லை. ம்.. சுமார், சரி இல்லை என்று புறம் தள்ளி விடுவேன். பின்னர் சில யோசனை சட்டென உதிக்கும், அது பரவாயில்லை என தோன்றும். உடன் எழுதி விடுவேன்.

தங்களுக்கும் என்ன இது, அடுத்த பகுதி வரவில்லையே என்ற எண்ணம் உண்டாகும் என நினைக்கிறேன். மன்னித்து விடுங்கள். சிறிது தாமதத்திற்கு.

இந்த புரிதல் நம் உறவு பலப்பட உதவும் என்பதால் இதை எழுதினேன்.

No comments:

Post a Comment