மண்ணில் புதைந்த ஆலயம் - பகுதி 1

  • உண்மை சம்பவங்களின் அடிப்படையில்
  • சரித்திர பிண்ணணியோடு ஒரு அதிர்ச்சி தொடர் கதை.

நன்றி திரு.ஸ்டீபன்

[திரு.ஸ்டீபன் அவர்களின் ஒலி ஒளி பேழையில் கண்ட தகவல்களின் தாக்கமே இந்த பதிவு. நன்றிகளையும் வணக்கத்தையும் தங்கள் சார்பாக அவர் பாதங்களில் சமர்ப்பித்து விட்டேன்]

உள்ளுணர்வு:

சில காரியங்களை தொடங்கும் முன்னே அது நல்லது என்று தோன்றும். கடினம் என்று தோன்றாது மனதிற்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும். அப்படி ஒரு உணர்வை இந்த படைப்பு தொடங்கும் போது பெறுகிறேன்.

'என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்,
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்'

என்ற திரை பாடல் வரிகள் மனதை வருடுகிறது

எழுத வேண்டும் என்று தீர்மானம் ஆனதும், வார்த்தைகள் கோர்வையாய் விழும் மாயம் இன்னும் புரியவில்லை. எழுதி முடித்த பின் சில வரிகளும், வார்த்தை கோர்வைகளும் எனக்கே அற்புதமாய் தோன்றுகிறது. இது நான் எழுதியதா என்ற கேள்வியும் வியப்பும் கூட வருகிறது

அற்புதம் என்று நாம் எழுதியதை சொல்ல அன்னியப் பட வேண்டும். என்னை உதறி விட்டு, நான் இல்லை என்ற நினைவு வந்தாலே நல்லா இருக்கு என்று சொல்ல முடியும்.

எழதுவது நான் இல்லை என்று தோன்றுவதால் சாதிப்பதாய் தோன்றவில்லை.

இந்த பதிவு எழுதும் போது எனக்கு மிகுந்த மகிழ்வும் ஒரு திருப்தி தோன்றுகிரது.


முன்னுரை:

இது கதையா அல்லது கட்டுரையா. பதிவா அல்லது தகவல்களா

நான் சிறு வயதில் சென்று பார்த்த கோவில் தான் இது. கேட்ட சேதி தான் இது. என்றாலும் திரு. ஸ்டீபன் அவர்களின் ஆராய்ச்சி கேட்டதும் மனது ஆடி போயிட்று . அந்த தகவல்களின் அடிப்படையிலே இதை எழுதுகிறேன்.

இந்த செய்தி கேட்ட போது வியப்பும் வேதனையுமாய் நான் உணர்ந்த உணர்வுகள் வார்த்தை வடிவம் பெற்றது தான் இந்த நவீனம்

ஆரம்பிக்கும் முன்:

சொக்கன் குடிஇருப்பு என்ற ஒரு சிறிய கிராமத்தின் கதை இது.
இது ஒரு உண்மை நிகழ்வு. கற்பனை கதை அல்ல.

சேசு மாரியாயி, அதுத்துதவி பாண்டியன் எல்லாம் நிஜத்தில் அங்கே நடமாடியவர்கள்.

சரி… இரண்டாயிரம் வருடத்து பழைய செய்தியை தூசி தட்டி சொல்லுவதன் நோக்கம்… நாம் கடந்து வநத பாதை அறிவது நல்லது அல்லவா

*மக்கள் நடந்து சென்ற மண்ணில் கிழே ஒரு ஆலயம் புதைந்து கிடந்தது
அப்படியா !!! எத்தனை நாட்களாக –
*ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை. இருநூறு வருடங்களாக ஒரு ஆலயம் மண் மூடி இருந்து இருக்கிறது
*தென் தமிழ் நாட்டில் தூத்துக்குடி அருகில் இன்றும் இந்த கோவில் உண்டு.

*மண் மூடிய இந்த ஆலயமே இந்தியாவின் முதல் கிறித்துவ ஆலயம் என்றால் - சரித்திர சான்றுகள் இல்லை என்றாலும் சாத்தியம் உண்டு.
* மண் மூடிய காரணம் ------ ஒரு தமிழ் பெண்ணின் சாபம் !!!
*மதுரையை எரித்த கண்ணகியின் கதை நமக்கு தெரிந்து இருக்கும் பொது சேசு மரியாயின் கதை புதைந்து போன மர்மம் என்ன



*ஒரு பெண்ணின் சாபத்தால் நன்றாய் வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு கிராமம் சொக்கன் குடி இருப்பு நரிகளும் நாய்களும் குடியேறிய அவலம் நிகழ்ந்தது ஏன்
*அதென்ன தமிழ் பெண்ணின் சாபம் ------- குற்றமற்ற அந்த பெண்ணிற்கு விதிக்கப்பட்ட நடை விளக்கு தண்டணை தான்.
*நடை விளக்கு என்ற கொடுமையான தண்டனை என்ன ?


* சரி மூடிய மண் விலக காரணம்? மண் மூடி இருந்த ஆலயம் பற்றி எப்படி தெரிந்தது…. தவறு இழைத்ததால் ஆட்சி மாறும் வரை விதி காத்து இருந்ததா ------- ஆட்சி மாற்றத்திற்கு பின்னரே மூடிய மண் விலகியதா
* ஒரு ஆலயம் ஆட்சி மாற்றத்தால் பட்ட இன்னல்கள் என்ன என்ன
* குளம் வெட்டியதையும் கிணறு தூர் வாரியதையும் பதிவு செய்த அரசு பதிவேட்டில் ஒரு வருடமாய் நடந்த இந்த கோவில் அகழ்வாராய்ச்சி பதிக்க படாதது ஏன்.

கேள்விகளாய் விரிந்த இந்த முன்னுரை முற்றும்.

பதில்கள் அறிந்து கொள்ள வாருங்கள் நம் பதிவுக்கு செல்வோம்.

சில கற்பனை கதா பாத்திரங்களை நான் உருவாக்கி கொண்டேன். மற்றபடி நீங்கள் சந்திக்க இருக்கும் அத்தனை பெரும் நகமும் சதையுமாய் இந்த பூமியில் வாழ்ந்தவர்கள்


பகுதி 1


தூத்துக்குடி. தென் தமிழகத்தின் ஒரு கடற்கரை பட்டணம்.

விடியல் நேரம். சுருசுருப்பாய் எழுந்து ஒரு சிலுப்பு சிலுப்பி சேவல் கூவியது. கோழி கூவாது, சேவல் தான் கூவும்.

காற்றிலே உப்பின் மணமும், கனமும், வேகமும். உள் வாங்கி சுவாசித்த அத்தனை மனிதரும் அன்பிலும், வீரத்திலும், ரோசத்திலும் மேலோங்கி நிற்பார்கள். இப்போ தெரியுதா வெட்டு குத்து ஏன் ஜாஸ்தி ஆச்சுன்னு.

அந்த ஒற்றை வீட்டின் உயர்ந்த படிக்கட்டில் உட்கார்ந்து கருப்பட்டி காப்பியை சுவைத்து கொண்டு இருந்தான் இனியன். தூத்துக்குடி கருப்பட்டியும் அய்யனார் காபி பொடியும் சேரும் பொது உள்ள சுவை தனி. காப்பியின் திண்ணம் மிக குறைவு காரணம் நிறம் மாற்ற மட்டுமே ஊற்றப் பட்ட பாலின் அளவு. காலை காற்று மிகவும் சுகம். நன் பகல் மற்றும் மதியம் மட்டும் தாங்கவில்லை. அதுவும் பிசுபிசுப்பாய் வியர்க்கும் போதும் வியர்வை கையில் ஓட்டும் போதும் வியர்வை துடைக்கும் போது கருப்பாய் வரும் தூசியும் கஷ்டம். இனியன் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாம் தூத்துக்குடி தான். வேலை செய்வது அமெரிக்காவில். பெற்றோரை பார்க்க இரண்டு வருடத்திற்கு ஒரு முறை பிறந்த ஊர் வருவது வழக்கம்.

வெளுப்பாய் நோஞ்சானாய் கண்ணாடி அணிந்து இரண்டு மக்கட் செல்வங்கள். முத்தது பெண், இரண்டு வயதில் மகன் அடுத்தது. காடு கரை ஓடி, மேல கீழ விழுந்து எந்திரிச்சா இனியன் போலே திடகாத்திரமா இருக்கும். குளு குளு அறையிலும் / வாகனத்திலும் நறுவிசாய் திங்கும் உணவிலும் பானகத்திலும் வேறுஎன்ன

“வேணாம் அத்தை மினரல் வாட்டர் பெட்டர், இந்த தண்ணி அவனுக்கு வயித்துக்கு ஒதுக்காது” என்று பேரனுக்கு தண்ணிர் தர முயலும் ஆச்சியை தடுக்கும் பெண்டாட்டி. நல்லவள். வருடத்திற்கு ஒரு முறை தானே மாமியார் மருமகள் மல்லு கட்டு என்பதால் விட்டு கொடுத்து இருவருமே.

தாத்தா பாண்டியன் நடு நிலை பள்ளி ஆசிரியர். பாடம் சரித்திரம். இலக்கியம் சரித்திரம் இரண்டுமே மாணவர் கணிப்பில் வேகாத பருப்புக்களே. விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பாஸ் அக வேண்டிய கட்டாயம் உண்டு. கணிதத்திற்கும் அறிவியலுக்கும் ஒரு தனி மவுசு. வாங்குகிற சம்பளத்துக்கு மேல் டியூசன் வரும் வாய்ப்பு எல்லாம் சரித்திரத்துக்கு இல்லை. சின்ன ஊர். சுருங்கிய செலவு. வாத்தியார் என்ற சமூக அந்தஸ்து. குறைவில்லா ஜீவனம்.

பிள்ளைய பெத்து வளர்த்தி ஒரு நல்ல நிலைக்கு ஆக்கியாச்சு. ரிட்டையரும் ஆயாச்சு, இனி என்ன, இயேசு எப்போ கூப்பிடுவாரோ அப்போ போக வேண்டியது தான். இனியனும் நல்ல பிள்ளை. மற்ற பிள்ளைகள போலே இல்லாம ஒழுங்கா படிச்சான் ஒழுக்கமா இருந்தான். ஒரே ஒரு தடவை நண்பர்களோடு போய் தண்ணி அடிச்சிட்டு வந்துட்டான். வெளியையும் சொல்லலே, அவன் கிட்டேயும் கேட்கல பொண்டாட்டி கிட்ட மட்டும் புலம் புனதொட சரி.

தன் இன்பத்திலும் துன்பத்திலும் உடன் இருந்த மனைவியை அன்பாய் பார்த்தவர். பிள்ளைகள் படிப்பு வளர்ப்பு எல்லாம் அவதான. வீடு கட்டினப்போ காதிலே கழுத்திலே உள்ள எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டு சேலை இழுத்து போர்த்திகிட்டு அவ கோவிலுக்கு வரும் போது துக்கம் நெஞ்சை அடைக்கும். ஒரு நாள் பொழுது இல்லாம இந்த குடும்பத்துகுன்னு உழைச்சவ. அவள கூட்டிகிட்டு டெல்லி போகணும். சென்னைக்கு அந்த பக்கம் போனதே இல்லை. காசு பணம் குறைவு இல்லை, நேரம் வாய்க்கல அவ்ளவுதான்.

தின பூசை செல்வது அவர் தவறியதே இல்லை. தவறாமல் செய்யும் வேலை இது. எழுந்தவுடன் சென்று முழு பூசை பார்க்காமல் விட்டால் அந்த நாள் பூரா எதோ போலே இருக்கும். காய்ச்சல் வந்தாலும் கூட தீர்த்த தொட்டி அருகில் உட்கர்ந்தாவது ஒரு பூசை பார்த்தால் நல்லது. இங்கே வீட்டிலே உட்கார்ற மாதிரி அங்கே கோவிலே உட்கார வேண்டியது தானே என்று விளக்கம் கொடுப்பார்.

அவர் முதல் பூசை சென்று திரும்பி வருகிறார். மூங்கில் மர திரட்சியில், முழங்கை நீளத்தில் முருங்கைகாய். யாழ்பாணம் காய் என்ற ஜாதி. அடுத்த கையில் உபரியாய் ஒரு கொப்பு முருங்கை இலை. முருங்கைகாய் சாம்பாரும் முருங்கை கீரை பொரியலும் இருந்தால் ஒரு கை சோறு கூட சாப்பிடுவான் இனியன்.


"குட்மார்னிங்" பதில் வணக்கம் சொல்லி தலை அசைத்தார் பாண்டியன்.
"எத்தனை மணிக்கு கிளம்புறோம்"
"பத்து மணிக்கு, சரியா இருக்கும்ல"

"ஆங்.... நாற்பது நிமிசம் திருச்செந்தூர், அப்புறம் ஒரு நாற்பது நிமிசம், அவ்வளவு தான்"

குறுகிய சாலையிலே விரைந்து கொண்டு இருந்தது அந்த குளு குளு கார். சிறிய விழிகளை விரித்து இரண்டு பக்கமும் பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான் இனியன். தலை திருப்பி பின் இருக்கையில் பார்த்தான். தலை சாய்த்து கொட்டாவி விட்ட பாவனையில் தூங்கி கொண்டு இருந்தார் பாண்டியன்.

"... இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு"
உறக்கம் கலைந்து எழுந்து பார்த்தவர் சொன்னார் " இன்னும் ஒரு பத்து நிமிஷம் "

இனியன் தயார் ஆனான். புகைப்பட கருவியை இயக்கி பார்த்தான். குனிந்து கால் ஷுவின் லேசு இறுக்கி கொண்டான்.

மனதினுள் சொன்னான் "எத்தனை வருட கனவு இது"

வண்டி சிறிய குலுக்கலுடன் நிதானமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது. இனியன் ஆர்வமாய் இரண்டு பக்கம் பார்த்தான். சிவப்பு மண் அவன் கவனத்தை ஈர்த்தது. ரத்த சிவப்பிலே பாலைவன மண். எங்கு பார்த்தாலும் சிவப்பாய் ஒரு பூமி.

சொக்கன் குடிஇருப்பு:

வண்டியின் ஏ சி அணைத்து விட்டு மூடி இருந்த சன்னலை கீழ் இறக்கினான். சுள்ளேன்று வெயில் முகத்தில் அடித்தது. சுட்டெரிக்கும் வெயில்.

ஆனால் ஒரு வித வாசனை. நீண்ட மூச்சு உள் இழுத்து நுரையிரலை நிரப்பிக் கொண்டான்.

ஆழமாய் உற்று பார்த்த பாண்டியன் சிரித்த முகத்தோடு சொன்னார் 'என்னை மாதிரியே செய்யுற. எப்பல்லாம் இந்த ஊருக்கு வருவேனோ அப்போ எல்லாம் இந்த ஊர் என்னோடு பேசுற மாதிரியே இருக்கும். எத்தனை காலம் புழங்கின ஊர் இது. எத்தனை புதுமை, எத்தனை சாவு'

அந்த ஆலயத்தின் வாசல் வரை அந்த தார் ரோடு. நீண்ட பயணத்தின் முடிவாய் அந்த வாகனம் நின்றது. அமைதியான சூழலில் எங்கோ குறைக்கும் நாயின் குரல் கேட்டது. வெளியில் இறங்காமல் அந்த ஆலயத்தை பார்த்த வாறு அப்படியே இருந்தான் இனியன். வண்டியை விட்டு இறங்கி இனியன் இருக்கும் இடம் வந்தார் பாண்டியன்.

தொந்தரவு செய்யாமல் அமைதியாய் பார்த்த படி நின்றார். வாகன ஒட்டி இளைப்பாற மரத்தடி நோக்கி சென்றான்.

அருகில் வந்து நின்ற கவனித்த இனியன், இறங்க வேண்டும் என்ற நினைவு வர தன கால் பதிய இறங்கினான். உஷ்ணக் காற்று மணல் வாரி தட்டியது நடக்கும் பொது கால்கள் புதைந்தது.

ஆலயத்தின் அருகில் வந்து குனிந்து அந்த அஸ்திவாரம் தொட்டான். நடந்து அவன் அருகில் வந்த பாண்டியன் சொன்னார். "புனித தோமையார் இறை இயேசுவின் நேரடி சீடர் உருவாகிய ஆலயம் இது. இந்தியாவின் முதல் ஆலயமாய் இருக்கலாம். பார் இத்தனை பெருமை உள்ளடக்கிய இந்த ஆலயம் அமைதியாய் ஒளிந்து கொண்டு இருக்கிறது”


……தொடரும்

6 comments:

  1. this is interesting.

    ReplyDelete
  2. Excellent. Gripping flow. Very good style of writing. Please continue. We wish you all the very best and look forward to reading more here.

    ReplyDelete
  3. பின்னூட்டம் தந்து ஊக்கம் அழித்த பெயரில்லா, ஷீரீஜா, ஜோ பாஸ்கர் அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றி.

    என்ன தவம் செய்தேன், இந்த வரம்/வரவு பெற.

    மனோ பிரபா

    ReplyDelete
  4. மன்னிக்கவும். ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி.

    ஆஹா ஒரு எழுத்துப் பிழை இத்தனை பெரிய தவறான அர்த்தம் தந்து விட்டதே.

    ReplyDelete
  5. ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கு! மேலும் தொடர்கள் எங்கே!

    ReplyDelete