மண்ணில் புதைந்த ஆலயம் - பகுதி 4

மார்கழி மாதத்து காற்று சுகமாய் வருடியது. மதுரை சீமையின் ராஜ கொலு மண்டபம்.
முதலாம் நூற்றாண்டு, கண்டப்ப ராசா வந்து அமர்ந்ததும் மந்திரி பிரதானிகள் அமர்ந்தனர். உட்காரும் போது அவஸ்தையாய் அமர்ந்தார். ரோமானிய தூதுவர் சேரநாட்டு வருகை பற்றி மந்திரி சொல்ல தொடங்க ராசா வேதனையொடு ஏப்பம் வெளித் தெரியாமல் வாய் பொத்தி மறைத்தார்.

"சேர தேசத்தில் ரோமானியனை வழைத்து போட்டு இருக்கிறார்கள். கோழி தூவல் போன்ற தலை பாகை அனிந்து சேர மன்னன் நாணயம் வேறு புழக்கத்தில் விட்டு இருக்கிறான்"

"வணிகம் மிக்க பாண்டி மண்டலத்தை விட்டு அங்கு ஏன் சென்றான், நம் பாண்டி முத்தின் அருமை தெரியாதா. நாற்பது வருடத்துக்கு முன்னால் நடந்த சீசர் ஒப்பந்தம் தெரியாதா, அல்லது சீமையை அடுத்த‌ ரோமானிய குடி ஏற்றம் தெரியாதா. நம் நாட்டில் ஏன் வரவில்லை அந்த தூதுவன்."‍ உறுமலாய் ராசா கேட்டதும் அவரை குஷிப் படுத்த வேண்டி மந்திரி

"கப்பையும் கஞ்சியும் பிடித்து போயிற்றோ என்னவோ"
"கஞ்சி பிடித்ததா அல்லது வஞ்சி பிடித்ததா" என்று வெறோரு அதிகாரி சொல்ல, மண்டபம் குபீர் என சிரித்தது"அவன் ஊரை போல் குளிராய் இருப்பதனால் அங்கு சென்று இருக்கலாம்" முதிர்ந்த அதிகாரி சொன்னதும் சபை சமனம் ஆனது.

ஏன் போர்ச்சுகீசிய வெள்ளையர் நம் அங்காடித் தெருவில் உள்ளது தெரியவில்லையா" மருபடியும் சீரினார் ராசா, "ஒரு வேளை அதுவே காரணமாக இருக்கலாம் அல்லவா" முதிர்ந்த அதிகாரி மீண்டும் சொன்னார்.

"சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்று சொன்னால், ... " சட்டென எழுந்து நின்றார். சபை அதிசயித்தது. விறு விறு வென்று நடந்து சென்றார் ராசா. சபை திகைத்தது. ஏன் இத்தனை கோபம். நாம் ஒன்றும் தவறாக பேச வில்லையே. சில காலமாகவே ராசாவின் கோபம் எல்லோரையும் கலவரப் படுத்தியது.

வேகமாய் நடந்த போது, ராசா தன் தவறை உணர்ந்தார். மண்டபத்தை விட்டு ஏன் இப்படி பாதியில் வந்தோம். நின்று திரும்பி " நாளை இது பற்றி விரிவாய் பேசலாம், முக்கிய சோலி ஒண்ணு இருக்கு" மறுபடியும் நடக்க தொடங்கினார். பெருமூச்சு விட்டு மந்திரிகளும் சபை விட்டு விலகினர்.

உப்பரிகை சென்று கல் மேடையில் அமர்ந்தார். உட்காரும் போதும் கட்டியின் தொல்லை. இன்று மண்டபத்தில் வந்த கோபத்திற்கும் இதுவே காரணம். இது சரி இல்லை. உடல் உபாதை மனதை விரட்டுகிறது. எப்போதும் ஒரு பதட்டம். கண் பார்வை கூட லேசாய் தவறுகிறது. தூரத்தில் வரும் ஆள், தெரிந்தவர் போல் இருந்தாலும் சரியாக பிடி பட வில்லை. நாட்டை ஆள்பவன் அமைதி கொண்டு பல விசயங்கள் சிந்திக்கவும், செயல் படுத்தவும் வேண்டி இருக்கிறது.

சிந்தனையின் ஊடே, ஆள் வரும் அரவம் கேட்டது. சரி வரட்டும் என்று கண் மூடி காத்து இருந்தார். உப்பரிகையின் மேல் மெதுவான தப்படிகளில் நடந்து வந்தார் அவர். மெலிந்த தேகம், பால் நிறம், முகத்தில் தேஜஸ். அமைதியான புன்னகை.சிவந்த மெல்லிய உதடு. கோரை முடி.

“ரம்பான் வந்திருக்கேன்" தமிழில் லேசான மலையாள வாடை.

ஒ... இது ரம்பான் பட்டர் அல்லவா ராசா மேல் துண்டு உதறி எழுந்தார். "வா ரம்பான், தூரத்திலேயே பார்த்தேன். சட்டென்று பிடி பட வில்லை. நீ பக்கத்தில் வந்ததும் தெரிகிறது. நீ நிறைய மாறி இருக்கிறாய்.எங்கே உன‌து குடுமி ம‌ற்றும் பூணூல்"

மெல்லிய‌ புன்ன‌கையில் ர‌ம்பான் சொன்ன‌து "என்னை சாதி பிர‌ஷ்ட‌ம் செய்து, அடையாள‌த்தை அக‌ற்றி விட்டார்க‌ள், தெரியாதா நான் வேத‌த்திற்கு மாறி விட்டேன்"

"ஏன் இப்ப‌டி செய்தாய்” “ஒரு புனிதரை பார்த்தேன், அவர் பெயர் தோமா. அவரது உபதேசமும் செபமும் சரி எனப் பட்டது”

கண் மூடி, லேசாய் முகம் மேல் உயர்த்தி தொண்டை செருமிக் கொண்டு ராக பாவனையில்

ஏசுவின் சீடராம் புனித தோமையார்
ஏழை எளியோருக்காய் வாழ்வு துறந்து
பேயும் பிசாசும் நடுங்கி ஒட‌
வேதம் படித்து புதுமைகள் செய்தார்

பாடி முடித்து அந்த கவிதையின் அர்த்ததில் லயித்து அப்படியே கண் மூடி நின்றார்.
நல்ல கவிதையாக் இருக்கிறதே, என்ற ராசாவின் குரல் கேட்டு, ஹும்.... எளிமையான கவிதைகள் மூலம் நல்லதை சொல்ல முயலுகிறேன்.

சிலுவை எனும் அடையாளமும், வேதம் எனும் புத்தகமும் கொண்டு அன்பான வார்த்தைகளில் நம்மை அதிசயிக்கிறார். அவர் பிரார்த்தனையில் ஒரு வித்தியாசம். முழந்தாலிட்டு கைகள் குவித்து கண்கள் மூடி பிரார்த்திக்கிறார். அரமாயிக் மொழியில் ஒரு சிறிய பிரார்த்தனை செய்கிறார், மனதில் தோன்றும் வார்த்தைகள் சொல்லி பிரார்த்திக்க தூண்டுகிறார்.

"அதெல்லாம் சரி தான். நாம் சார்ந்து இருக்கும் மதத்தை, குலத்தை விடலாமா"


“நல்லது என தோன்றும் போது, உண்மை என உணரும் போது என்ன செய்ய, பிடித்த முயலுக்கு மூணு காலு என்று சொல்லவா. இறை உண்டென்றால்,அதுவும் ஒன்றே என்றால், அதை அடையும் வழியில் உள்ள மாறுதலை ஏறறுக் கொள்ள வேண்டியது தானே, தங்கள் சமூகத்தில் இன்னோரு விண்ணப்பம் உண்டு, அந்த புனிதரை இங்கு வரவழைக்க தங்கள் அனுமதி வேண்டும், தங்கள் உடல் நலம் பெற அவர் பிரார்த்திக்க வேண்டும்”

ரம்பா... அவர், அந்த புனிதர் இங்கு வருவது சரியா. அவர் பிரார்த்தனை சரியா. என் உடல் குணம் ஆகுமா.

மெல்ல முறுவலித்தான் ரம்பான். நான் சொல்லும் புனித‌ர் தோமா நம்பிக்கையின்மையின் சிகரம். சக சீடர்கள் சொல்லியும் கூட, அவரது குருவின் உயிர்ப்பையே நம்பாதவர். ஆணிக் காயங்களை கை விரலால் தொட்டுப் பார்த்து உண்ர்ந்தவர்.

என் மனது தீர்மானமாய் சொல்லுகிறது. இவரால் மரணம் பொய்க்கும், நோய் தீரும், வளம் கொளிக்கும். நம் மனித இயலாமை தோற்றுப் போகும்.

அமைதியாய் பார்த்தார் ராசா, தனக்குள் ஒரு மாறுதல் நிகழ்வதை உணர்ந்தார், அமைதி மனதிலும் உடலிலும் குடி ஏறியது போல். மறுக்க வாயும் வார்த்தையும் வராமல் ஆம் என்பதாய் தலை அசைத்தார்.

***

இனியன் நிமிர்ந்து பாண்டியனை பார்த்தான். திரும்பி அந்த கோவிலின் அஸ்திவாரம் பார்த்தான். லேசாய் சிரித்தான். இது இரண்டாயிரம் ஆண்டு முந்தையதா. புனித தோமையார் கட்டியதா. அவ‌ர் கி.பி.50 க‌ளில் வந்த‌து கேர‌ளாவிற்கு தானே.


தொடரும்.....

No comments:

Post a Comment